முகப்பு
தூத்துக்குடி

வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்!

திருச்செந்தூரில் நடைபெற்ற வைகாசி விசாகத் திருவிழா குறித்து...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள். - படம் - தினமணி
பகிர்:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை (மே 30) லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் அவதரித்த ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை பங்கு மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

வைகாசி விசாகத்திருவிழாவில் சுவாமியை தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாள்களாவே திருச்செந்தூருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள், பாதயாத்திரையாக வந்ததால் திருக்கோயில் வளாகமே பக்தர்களால் நிரம்பி வழிந்தது.

Advertisement

Advertisement

பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம், அங்கப்பிரதட்சணை மற்றும் அடிப்பிரதட்சணை செய்தும் தங்கள் நேர்த்திகடனை சுவாமிக்கு செலுத்தினர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கடலில் புனித நீராடினர். - படம் - தினமணி
summary

On Saturday (May 30), on the occasion of the Vaikasi Visakam festival at the Arulmigu Subramaniya Swamy Temple in Tiruchendur, hundreds of thousands of devotees took a holy dip in the sea and offered worship to the deity.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.