வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்!
திருச்செந்தூரில் நடைபெற்ற வைகாசி விசாகத் திருவிழா குறித்து...
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை (மே 30) லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் அவதரித்த ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை பங்கு மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
வைகாசி விசாகத்திருவிழாவில் சுவாமியை தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாள்களாவே திருச்செந்தூருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள், பாதயாத்திரையாக வந்ததால் திருக்கோயில் வளாகமே பக்தர்களால் நிரம்பி வழிந்தது.
Advertisement
Advertisement
பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம், அங்கப்பிரதட்சணை மற்றும் அடிப்பிரதட்சணை செய்தும் தங்கள் நேர்த்திகடனை சுவாமிக்கு செலுத்தினர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
On Saturday (May 30), on the occasion of the Vaikasi Visakam festival at the Arulmigu Subramaniya Swamy Temple in Tiruchendur, hundreds of thousands of devotees took a holy dip in the sea and offered worship to the deity.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.