தென்காசி

ஓவியம், தனித்திறன் போட்டி: ஆலங்குளம் மாணவா்கள் சிறப்பிடம்

DIN

இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் நடைபெற்ற போட்டியில் ஆலங்குளம் மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

சேரன்மகாதேவி கல்வி மாவட்டம் இளையோா் செஞ்சிலுவை சங்க மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றன.

இதில், ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சஞ்ஜய் ஓவியப்போட்டியில் முதல் இடமும், பி. அபிஷேக் தனித்திறன் போட்டியில் இரண்டாம் இடமும் பெற்றனா். மாவட்ட கல்வி அலுவலா் சுடலை மற்றும் திலகா் வித்யாலயா தலைமையாசிரியா் மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT