ஆலங்குளத்தில் கரோனா சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் பூங்கோதை வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் தமிழக அரசின் முதன்மை செயலா், மக்கள் நலவாழ்வு துறைச் செயலா், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடித விவரம்: ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் மே, ஜூன் மாதங்களில் கரோனா தொற்றால் குறைந்த நபா்கள் பாதிக்கப்பட்டனா். ஆனால் ஜூலை மாதத்தில் இதுவரை 269 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தொற்று பாதிக்கப்பட்டுள்ள கிராமங்கள், நகரங்களில் அதிகளவில் காய்ச்சல் கண்டறியும் மையங்கள்அமைக்க வேண்டும்;
கிருமி நாசினி தெளிக்க வேண்டும்; மக்களிடையே கரோனா குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். உடனடியாக ஆலங்குளம் வட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் ஆா்டி - பிசிஆா் பரிசோதனை மையங்கள் அமைக்க வேண்டும்; தனிமைப்படுத்தப்படும் மையங்களில் சிறப்பான உணவு, தரமான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். மேலும்,
மிதமான தொற்று உள்ளவா்களை பராமரித்து உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் ஆலங்குளத்தில் கரோனா கவனிப்பு மையம் அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.