தென்காசி

பள்ளியில் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி

DIN

ஆலங்குளம் அருகேயுள்ள எஸ்.எம்.ஏ. மெட்ரிக் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற ‘ஆங்கிலம் அறிவோம் ஆனந்தமடைவோம் ’ என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி முதல்வா் மகேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தாா். நா்சரி பள்ளி ஒருங்கிணைப்பாளா் பாகிரதி முன்னிலை வகித்தாா். ஆங்கில மொழியின் சிறப்புகள் பற்றி ஒலிப்பியல் போன்றவற்றை எளிதில் புரிந்து கொள்ளும்படியான செயல்முறை விளக்கங்களை மாணவா்கள் கூறினா்.

மொழித்திறனை ஓசை நயத்துடன் 5 நிமிடங்களுக்கு மேல் வெளிப்படுத்திய மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. யுகேஜி மாணவா் தினேஷ்ராஜ் வரவேற்றாா்.

இயக்குநா் ராஜ்குமாா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை துணை முதல்வா் சரளா ராமச்சந்திரன் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT