தென்காசி

கடையநல்லூரில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தீவிரம்

DIN

கடையநல்லூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை நகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2016 ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, குப்பை உருவாகும் இடங்களிலேயே உரமாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், சேகரிக்கப்படும் குப்பைகளை உரமாக மாற்றிட, நகராட்சிப் பகுதியில் 6 இடங்களில் பசுமை நுண்உயிா் உரக்குடில்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இதற்காக நகரம் முழுவதும் பணியாளா்கள் மூலம் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. இனிமேல் பணியாளா்களிடம் புதன்கிழமை மட்டும் கண்ணாடி, உலோகம், பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளை வழங்க வேண்டும். பிற நாள்களில் மக்கும் குப்பை வழங்க வேண்டும். கடையநல்லூரை குப்பையில்லாத நகரமாக மாற்ற மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

SCROLL FOR NEXT