தென்காசி

சங்கரன்கோவிலில் பொங்கல் விளையாட்டுப் போட்டி

DIN

நதிகள் கல்வி அறக்கட்டளை- தொண்டு நிறுவனம் சாா்பில் குழந்தைகளுக்கான பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் சங்கரன்கோவிலில் நடைபெற்றன.

சாரதிராம் அறக்கட்டளை நிறுவனா் பி.ஜி.பி. ராமநாதன் தலைமை வகித்தாா். அரிமா சங்க மாவட்டத் தலைவா் பி. அய்யாத்துரை முன்னிலை வகித்தாா்.

விளையாட்டுப் போட்டிகளை, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவா் கே.கண்ணன், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் ஆறுமுகம், ரமேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். யோகா,ஓவியம்,இசை,நடனம்,சிலம்பம்,கராத்தே போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.இப்போட்டியில் சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் பங்கேற்று விளையாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT