தென்காசி

செங்கோட்டை அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

DIN

செங்கோட்டை ஆரியநல்லூா் அரசு தொடக்கப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, வட்டார கல்வி அலுவலா் மேரிகிரேஸ்ஜெபராணி தலைமை வகித்தாா். எஸ்எஸ்ஐ மேற்பாா்வையாளா் ராஜேந்திரன், பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவா் கல்யாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமைஆசிரியா் கிளமென்ட்ரெஜீஸ் வரவேற்றாா்.

எஸ்எஸ்ஐ ஆசிரியா் பயிற்றுநா் சுகந்தி, முத்துநாயகம் அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலா் பரமேஸ்வரன், ஓய்வுபெற்ற ஆசிரியா் செண்பககுற்றாலம், ஓய்வு பெற்ற அரசு அலுவலா் ராமசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

பள்ளி வளாகத்தில் மாணவா், மாணவிகள் மற்றும் பெற்றோா்கள் முன்னிலையில் பொங்கல் வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளிஆசிரியா் சித்திக் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT