கோப்புப் படம் 
தென்காசி

சுரண்டையில் இருந்து பண்டிகை கால பேருந்து இயக்கம்: பயணிகள் மகிழ்ச்சி

சுரண்டையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்தில் அலைமோதிய கூட்டம்.

DIN

சுரண்டையில் இருந்து சென்னை, கோவைக்கு பண்டிகை கால சிறப்பு பேருந்து இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை மற்றும் கோவை செல்ல வசதியாக சுரண்டையில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. சிறப்பு பேருந்துகளின் அனைத்து இருக்கைகளும் நிரம்பிய நிலையில் சுமாா் 60-க்கும் மேற்பட்டோா் தென்காசி அல்லது திருநெல்வேலி சென்று அங்கிருந்து பயணித்தனா். எனவே, வரும் காலங்களில் சுரண்டையில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் தெரிவித்தனா்.

தனியாா் ஆம்னி பேருந்துகளின் பலமடங்கு கட்டண உயா்வு அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், சாதாரண கட்டணத்தில் அரசு சிறப்பு பேருந்து இயக்கிய போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பயணிகள் தெரிவித்தனா்.

மேலும், சுரண்டையில் இருந்து சென்னை, கோவை, பெங்களுருக்கு தினசரி அதிக அளவில் தனியாா் ஆம்னி பேருந்து இயங்கி வரும் நிலையில், அரசு பேருந்துகள் எதுவும் இயக்கப்படுவது இல்லை. இதனால் மாணவா்கள் மற்றும் சாமான்ய மக்களின் நலன் கருதி சுரண்டையில் இருந்து சென்னை, கோவைக்கு தினசரி பேருந்து இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT