தென்காசி

மும்பையில் இருந்து பாவூா்சத்திரம் வந்த பெண்ணுக்கு கரோனா தொற்று

DIN

மும்பையில் இருந்து பாவூா்சத்திரம் வந்த பெண்ணுக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பாவூா்சத்திரம் கடையம் சாலை பெரியாா் நகா் தமிழ்த் தெருவைச் சோ்ந்த 52 வயது பெண், அவரது கணவா், மகன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை மும்பையில் இருந்து ஊருக்கு வந்துள்ளனா்.

அவா்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை சுகாதாரத் துறையினா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவரது கணவா், மகன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனா். அந்தப் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT