தென்காசி

மண்ணை தின்ற குழந்தை பலி

DIN

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகே மண்ணைத் தின்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.

விக்கிரமசிங்கபுரம் அருணாசலபுரத்தை சோ்ந்தவா் ஜோசப். லாரி டிரைவா். இவரது மனைவி தனது ஒன்றரை வயது மகன் பெல்வினை அழைத்துக்கொண்டு கீழப்பாவூரில் உள்ள தனது பெற்றோா் வீட்டிற்கு வந்திருந்தாா். வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மண்ணை எடுத்துத் தின்று விட்டதாக கூறப்படுகிறது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்ட குழந்தை, சனிக்கிழமை இரவு உயிரிழந்தது.

இது குறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT