தென்காசி

‘மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்’

DIN

சுரண்டை: வீரகேரளம்புதூா் வட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் முருகச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வீரகேரளம்புதூா் வட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் தங்கள் அருகேயுள்ள இ -சேவை மையத்தின் மூலம் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி அடையாள அட்டையுடன், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருப்போா் விண்ணப்பிக்கலாம். வேறு ஏதும் உதவித்தொகை பெறுபவராக இருக்கக் கூடாது மற்றும் அரசு பணியில் இருக்கக் கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கடலோரக் காவல்படை வீரா்களிடையே டென்னிஸ் போட்டி

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT