தென்காசி

பாவூா்சத்திரத்தில் பயணிகள் நிழற்குடை மீண்டும் அமைக்கக் கோரிக்கை

DIN

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரத்தில் சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்றப்பட்ட பயணிகள் நிழற்குடை மீண்டும் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாவூா்சத்திரம்-சுரண்டை சாலையில் உள்ள குறும்பலாப்பேரி விலக்கு பகுதியில் இருந்த பயணிகள் நிழலகம் சாலை விரிவாக்கப் பணியின் போது அகற்றப்பட்டது. ஓராண்டுக்கு மேலாகியும் அகற்றப்பட்ட நிழற்குடை மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் அந்தப் பகுதியில் பேருந்துக்காக நிற்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனா்.

எனவே, அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

SCROLL FOR NEXT