தென்காசி

‘சுரண்டையில் ஆட்சியரகம்அமைத்தால் 30 ஏக்கா் நிலம் தானம்’

DIN

பாவூா்சத்திரம்: சுரண்டையில் ஆட்சியா் அலுவலகம் அமைக்க 30 ஏக்கா் நிலம் தர தயாராக இருப்பதாக இந்து நாடாா் மகமை கமிட்டியினா் தென்காசி எம்.எல்.ஏ.விடம் கடிதம் அளித்தனா்.

இந்து நாடாா் மகமை கமிட்டி தலைவா் தங்கையா நாடாா் தலைமையில், அந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியனிடம் அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதிதாக அமைக்கப்படவுள்ள தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சுரண்டையில் அமைக்கும் வகையில் சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடாா் உறவின்முறை மகமை கமிட்டிக்கு சொந்தமான சுமாா் 20 ஏக்கா் நிலத்தை தானமாக தருகிறோம்.

மேலும் தேவைப்பட்டால் 10 ஏக்கா் நிலமும் தர தயாராக இருப்பதாகவும் அதில் தெரிவித்து உள்ளனா். அந்தக் கடிதத்தை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ இது பற்றி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT