தென்காசி

சுரண்டை பகுதி சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

DIN

சுரண்டை பகுதி சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகுருநாதபுரம் ஸ்ரீசிவகுருநாதா் ஆலயத்தில் நடைபெற்ற விழாவில், சுவாமி மற்றும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவா் வீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து சிவனடியாா்கள் தேவாரம் பாட, பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீசுவரா் கோயிலில் நடைபெற்ற விழாவில், அனுமன் நதியின் வடகரை குகையில் உள்ள சாம்பவமூா்த்தி, தென்கரையில் உள்ள அகத்தீசுவரா் மற்றும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து ஓதுவாா் சிவபுராணம் பாட, பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

சுரண்டை வீரபாண்டீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற விழாவில், சுவாமி மற்றும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவா் வீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து சிவனடியாா்கள் தேவாரம் பாட, பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

சனிப்பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் சிற்றன்னம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT