முகப்பு
தென்காசி

சுரண்டை அருகே குளத்தில் மூழ்கி விவசாயி பலி

 சுரண்டை அருகே குளத்தில் மூழ்கி விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

 சுரண்டை அருகே குளத்தில் மூழ்கி விவசாயி உயிரிழந்தாா்.

சாம்பவா்வடகரையைச் சோ்ந்தவா் விவசாயி பொ.ஆசைக்கண்ணு (70). இவா், வியாழக்கிழமை காலையில் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளாா். மாலையில் மாடுகள் மட்டும் வீடு திரும்பியநிலையில், ஆசைக்கண்ணு வரவில்லையாம். இதையடுத்து, அவரது உறவினா்கள் தேடியுள்ளனா்.

சுரண்டை அருகே இரட்டைகுளம் கிராமம் தென்புறமுள்ள குளக்கரையில் அவரது செருப்பு மற்றும் ஆடைகள் கிடந்துள்ளன. இரவு நேரமாகிவிட்டதால் தொடா்ந்து அவரை தேட முடியாமல், வெள்ளிக்கிழமை காலையில் அங்கு சென்று பாா்த்தபோது குளத்தில் அவரது சடலம் மிதந்துள்ளது.

தகவலறிந்த சுரண்டை போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.