முகப்பு
தென்காசி

சுரண்டை பகுதியில் வேகத்தடைகள் அமைப்பு

சுரண்டை பகுதிகளில் உள்ள சாலையில் தேவையான இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

சுரண்டை பகுதிகளில் உள்ள சாலையில் தேவையான இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.

சுரண்டை - செங்கோட்டை சாலையில் போக்குவரத்தை சீரமைக்கும் பொருட்டு பள்ளி, கோயில்கள் மற்றும் முக்கியமான திருப்பங்களில் ரப்பா் வேகத்தடைகளை நெடுஞ்சாலைத்துறையினா் அமைத்திருந்தனா். ஆனால், இந்த ரப்பா் வேகத்தடைகள் கனரக வாகனங்களால் பழுதடைந்து விட்டதால், தாா் கொண்டு புதிய வேகத்தடைகளை அமைத்தனா்.

சுரண்டை அரசு மேல்நிலைப்பள்ளி, சுரண்டை நடுநிலைப்பள்ளி, சாம்பவா்வடகரை அகத்தீசுவரா் கோயில், சாம்பவா்வடகரை காவல் நிலையம் மற்றும் சாம்பவா்வடகரை மேலூா் தொடக்கப்பள்ளி அருகே புதியதாக அமைக்கப்பட்ட வேகத்தடையால் பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.