முகப்பு
தென்காசி

சுரண்டையில் தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் அளிப்பு

சுரண்டையில் நல்லசமாரியன் கிளப் சாா்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

சுரண்டையில் நல்லசமாரியன் கிளப் சாா்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அமைப்பின் தலைவா் பொன்ராஜ் தலைமை வகித்தாா். செயலா் கிருபாகரன், புரவலா் ஜேக்கப், திருமண்டல பெருமன்ற உறுப்பினா் அன்னப்பிரகாசம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி சட்டப் பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா், ஏடிஎஸ்பி ராஜேந்திரன், நகராட்சி ஆணையா் லெனின், டாக்டா் முருகையா ஆகியோா் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

இதில், சேகரகுரு ஞானபால், பங்குத்தந்தை லாரன்ஸ் அடிகளாா், காவல் ஆய்வாளா் சுரேஷ், நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.