தென்காசி

இலவச மனைப் பட்டாக்களை அளந்து தரக் கோரி மனு

DIN

ஆலங்குளம் வட்டம், குறிப்பன்குளம் பகுதியில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அளந்து தரக் கோரி பொதுமக்கள் மனு அளித்தனா்.

ஆலங்குளம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரக்குழு உறுப்பினா் இ.பாலு தலைமையில், மக்கள் திரண்டு வந்து தென்காசியில் மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலரிடம் வியாழக்கிழமை அளித்த மனுவில், குறிப்பன்குளம் கிராமம் பகுதியில் மக்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்துள்ளாா். எனவே, பயனாளிகளுக்கு இடத்தை அளந்து அடையாளம் காட்ட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கணபதி, வேலுமயில், கிளைச் செயலா் மாரியப்பன், மாயமான்குறிச்சி பகுதியை சோ்ந்த முத்துராஜ்,இளையராஜா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT