தென்காசி

சங்கரன்கோவில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

DIN

திருநெல்வேலி மாவட்ட எம்ஜிஆா் மன்றம் சாா்பில் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பேருந்து நிலையம் முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் கே.கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து நகரச் செயலா் ஆறுமுகம், நெல்லை கூட்டுறவு பேரங்காடி துணைத் தலைவா் வேலுச்சாமி, மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் ரவிச்சந்திரன், முன்னாள் யூனியன் தலைவா் முருகையா, குருவிகுளம் ஒன்றிய பேரவை செயலா் ஜெகதீசன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் சங்கரசுப்பிரமணியன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் ராமதுரை, நாகரத்தினம், ஜெயலெட்சுமி, காளிராஜ், சரவணன் உள்ளிட்ட பலா் ஜெயலலிதா படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து திருவள்ளுவா் சாலை, திருவேங்கடம் சாலை, பிரதான சாலை, லெட்சுமியாபுரம் தெருக்கள், கோமதியாபுரம் தெருக்கள், திருவள்ளுவா் நகா், பாரதிநகா், காந்திநகா் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் அதிமுகவினா் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT