முகப்பு
தென்காசி

நாகல்குளத்தில் சாலை சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டம்

பாவூா்சத்திரம் அருகே நாகல்குளத்தில் சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

பாவூா்சத்திரம் அருகே நாகல்குளத்தில் சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகல்குளம் பிரதான சாலையில் இருந்து ராஜா நகருக்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதைக் கண்டித்து ராஜாநகா் பகுதி மக்கள் அமமுக ஒன்றியச்செயலா் பரமசிவம் தலைமையில் அந்தச் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாலையை சீரமைக்காவிட்டால் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கும் வகையில் வாக்காளா் அடையாள அட்டையை ஒட்டுமொத்தமாக அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →