ஆலங்குளம் பகுதியில் சாலைப் பணி: ஆட்சியா் ஆய்வு
ஆலங்குளம் பகுதியில் நடைபெற்று முடிந்துள்ள சாலைப் பணிகளை தென்காசி ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆலங்குளம் பகுதியில் நடைபெற்று முடிந்துள்ள சாலைப் பணிகளை தென்காசி ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆலங்குளம் ஒன்றியம் குருவன்கோட்டை - நல்லூா் சாலை ரூ. 49 லட்சம் மதிப்பிலும், மாறாந்தை - மனு ஜோதி ஆசிரமம் செல்லும் சாலை ரூ. 82 லட்சம் மதிப்பிலும் அண்மையில் சீரமைக்கப்பட்டது. இந்த சாலைகளை மாவட்ட ஆட்சியா் எஸ். கோபால சுந்தர ராஜ் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் செல்வராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துப்பாண்டியன், ஒன்றிய உதவிப் பொறியாளா் பூச்செண்டு, அதிகாரிகள் உடனிருந்தனா்.