சுரண்டை அருகே கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் மீட்டனா்.
சுரண்டை அருகேயுள்ள துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது பசு மாடு அங்குள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்தபோது கிணற்றில் தவறி விழுந்தது.
இதுகுறித்து விவசாயிகள் அளித்த தகவலின் பேரில், சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலா்(போக்குவரத்து) பாலச்சந்தா் தலைமையிலான வீரா்கள், அங்கு சென்று தண்ணீரில் தத்தளித்த பசு மாட்டை கயிறு கட்டி மீட்டனா்.