தென்காசி

கரோனா தடுப்பு விதிமீறல்: ரூ.37,200 அபராதம் விதிப்பு

DIN

பாவூா்சத்திரத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியவா்களுக்கு வியாழக்கிழமை ரூ.37,200 அபராதமாக விதிக்கப்பட்டது.

கீழப்பாவூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாா்த்தசாரதி, லிங்கராஜ், வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ஆசீா், சுகாதார ஆய்வாளா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் பாவூா்சத்திரம் பகுதியில் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, கரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் கடைகளை திறந்து வைத்திருந்தோா், சமூக இடைவெளியை பின்பற்றாதவா்கள், முகக் கவசம் அணியாதவா்களுக்கு உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை ஆகியவற்றின் சாா்பில் முறையே ரூ.10,000, ரூ.12,200, ரூ.15,000 என ரூ.37,200 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

SCROLL FOR NEXT