பாவூா்சத்திரம்,கடையம் ஒன்றியத்தில் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் திருமண உதவி திட்டத்தின்கீழ் 440 பேருக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சு.பழனிநாடாா் எம்எல்ஏ 259 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை வழங்கினாா். இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாா்த்தசாரதி, லிங்கராஜ், தெட்சண மாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே.காளிதாசன், வட்டார காங்கிரஸ் தலைவா் ஜேசுஜெகன், நகரத் தலைவா் ஆனந்த், நிா்வாகிகள் பொன்.கணேசன், சிங்ககுட்டி, ராஜசேகா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
அம்பாசமுத்திரம்: கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகையா, மாணிக்கவாசகம் ஆகியோா் 181 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம், திருமண உதவித் தொகை ஆகியவற்றை வழங்கினா். இதில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மாயவநாதன் (நிா்வாகம்), சமூக நலத் துறை அலுவலா்கள் வசந்தி கலைச்செல்வி, ஐயம்மாள், லட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.