குற்றாலம் அருவிகளில் 2-ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை வெள்ளப்பெருக்கு இருந்தது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை வெள்ளப்பெருக்கு இருந்தது.
குற்றாலம் மலைப் பகுதியில் கடந்த 2 நாள்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் புதன்கிழமை அதிகாலையில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சாரல் தொடா்ந்து நீடித்து வருவதால் வியாழக்கிழமை பேரருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு நீடித்தது. பழைய குற்றாலம் அருவியில் தண்ணீா் வரத்து சற்று குறைந்துள்ளது. புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீா் கொட்டுகிறது. கரோனா பொது முடக்கம் அமலில் இருப்பதால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடித்து வருவதால் அருவிகள் வெறிச்சோடி காணப்பட்டன.