தென்காசி மாவட்டமமக நிா்வாகக் குழு கூட்டம்
தென்காசியில் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் நிா்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.
தென்காசியில் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் நிா்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முகமது யாகூப் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பசீா் ஒலி, தமுமுக மாவட்டச் செயலா் அகமது ஷா ஆகியோா் முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலா் மைதீன் சேட் கான் சிறப்புரையாற்றினாா்.
தென்காசி, கடையநல்லூா், வாசுதேவநல்லூா், சங்கரன்கோவில் மற்றும் ஆலங்குளம் தொகுதிகளுக்கு தோ்தல் பணிக் குழு நியமிக்கப்பட்டது. இந்த 5 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு கடுமையாக உழைப்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்டப் பொருளாளா் அப்துல் காதா், துணைத்தலைவா் அப்துல் ரகுமான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.