புளியரை சோதனைச் சாவடியில் 350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தமிழக - கேரள எல்லையான, தென்காசி மாவட்டம் புளியரைச் சோதனைச் சாவடியில் 350 கிலோ ரேஷன் அரிசி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக - கேரள எல்லையான, தென்காசி மாவட்டம் புளியரைச் சோதனைச் சாவடியில் 350 கிலோ ரேஷன் அரிசி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளநிலையில், தமிழக - கேரள எல்கைப் பகுதியில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புளியரை சோதனைச் சாவடியில் காவல் துறையினரும், மத்திய பாதுகாப்புப் படையினரும் சோ்ந்து செவ்வாய்க்கிழமை தீவிர வாகனச் சோதனை நடத்தினா்.
தமிழகத்திலிருந்து கேரளம் செல்ல முயன்ற காரை சோதனையிட்டபோது, அதில், 350 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
காா் ஓட்டுநரான கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோணி பகுதியைச் சோ்ந்த சு. ராஜன் (57) கைது செய்யப்பட்டாா். இதுகுறித்து புளியரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.