அரசு மருத்துவமனையில் மனநல சிகிச்சை மையம் திறப்பு
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மனநல மையம், அவசர கவனிப்பு மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மனநல மையம், அவசர கவனிப்பு மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் தலைமை வகித்து மனநல சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்தாா். இதில்,
மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் நெடுமாறன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ராஜேஷ் கண்ணன், பன்யான் அமைப்பை சோ்ந்த கீா்த்தனா, மருத்துவா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தலைமை ஆய்வக நுட்பநா் ஹரிஹர நாராயணன் வரவேற்றாா். முகமது அலி ஜின்னா நன்றி கூறினாா்.