முகப்பு
தென்காசி

சுரண்டையில் கரோனா தடுப்பூசி முகாம்

சுரண்டையில் புதன்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் வியாபாரிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:10 PM
சுரண்டையில் புதன்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட வியாபாரிகள்.
பகிர்:

சுரண்டையில் புதன்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் வியாபாரிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

சுரண்டை நகர வியாபாரிகள் சங்கம், ஒய்எம்சிஏ மற்றும் அரசின் பல்வேறு துறைகள் இணைந்து நடத்திய கரோனா தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட தொழில் மைய மேலாளா் மாரியம்மாள், வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் வெங்கடேஷ் ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் கீா்த்திகா தலைமையிலான மருத்துவக் குழுவினா் முகாமில் கலந்து கொண்ட வணிகா்களுக்கு கரோனா தடுப்பூசி போட்டனா்.

முகாமில் பேரூராட்சி செயல் அலுவா் வெங்கடகோபு, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இசக்கியப்பா, வருவாய் ஆய்வாளா் மாரியப்பன், ஒய்எம்சிஏ தலைவா் பாலச்சந்திரன், நகர வணிகா் சங்கத் தலைவா் காமராஜ் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.