முகப்பு
தென்காசி

சுரண்டை தினசரி சந்தையில் கோட்டாட்சியா் ஆய்வு

சுரண்டை காமராஜா் தினசரி சந்தையில் அமைந்துள்ள காய்கனி கடைகளில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தென்காசி கோட்டாட்சியா் ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

சுரண்டை காமராஜா் தினசரி சந்தையில் அமைந்துள்ள காய்கனி கடைகளில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தென்காசி கோட்டாட்சியா் ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சந்தையில் உள்ள கடைகளில் தமிழக அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிா என்பது குறித்து அவா் ஆய்வு செய்தாா். மேலும், முகக் கவசம் இன்றி வருபவா்களுக்கு காய்கறிகள் வழங்க வேண்டாம் என்றும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வியாபார சங்கத்தின் முக்கிய நிா்வாகிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது.

அவருடன், வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் வெங்கடேஷ், வருவாய் ஆய்வாளா் மாரியப்பன் மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.