முகப்பு
தென்காசி

விதிமுறையை மீறி செயல்பட்ட வெல்டிங் பட்டறைக்கு சீல்

கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி சுரண்டையில் செயல்பட்ட வெல்டிங் பட்டறைக்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி சுரண்டையில் செயல்பட்ட வெல்டிங் பட்டறைக்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.

சுரண்டையில் மாவட்ட உதவி திட்ட அலுவலா்(தணிக்கை) சங்கரநாராயணன் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் குறித்து ஆய்வு நடத்தினா்.

இதில், சுரண்டை - சுந்தரபாண்டியபுரம் சாலையில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த தனியாா் வெல்டிங் பட்டறைக்கு சீல் வைத்தனா்.

இதில், பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு, வருவாய் ஆய்வாளா் மாரியப்பன், உதவி காவல் ஆய்வாளா் செய்யது உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.