தென்காசி

சுரண்டை வழியாக பெங்களூருக்கு பேருந்து இயக்கக் கோரிக்கை

DIN

சுரண்டை வழியாக பெங்களூருக்கு அரசு விரைவுப் பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சுரண்டை வழியாக சென்னை, திருப்பூருக்கு தலா 2 பேருந்துகளும், ஊட்டிக்கு ஒரு பேருந்தும் இயக்கப்படுகின்றன. இதனால், சுரண்டை பகுதி பயணிகள் சிரமமின்றி அப்பகுதிகளுக்குச் சென்றுவருகின்றனா்.

இந்நிலையில், பெங்களூரு பகுதியில் பணிபுரியும் சுரண்டை பகுதி மக்களின் நலன் கருதி செங்கோட்டையிலிருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்தை பாவூா்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை, சங்கரன்கோவில் வழியாக இயக்கினால் கூடுதல் மக்கள் பயனடைவா் என்பதால், சுரண்டை வழியாக பெங்களூருக்கு பேருந்து இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிவிஆர் ஐநாக்ஸ்: ரூ.1,958 கோடி - டிக்கெட் வசூலுக்கு போட்டியாக நொறுக்குத்தீனி வசூல்!

துப்பட்டாவில் சுழலும் மனம்! சஞ்சனா நடராஜன்..

16-ம் நூற்றாண்டு பெண்ணா? ஹரிஜா!

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

காஞ்சிப் பட்டு, கல் ஜிமிக்கி.. அபர்ணா பாலமுரளி!

SCROLL FOR NEXT