தென்காசி

சங்கரன்கோவிலில் மஜக நகர ஆலோசனைக் கூட்டம்

DIN

சங்கரன்கோவிலில் நகர மஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நகரச் செயலா் முகம்மது இத்ரீஸ் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் எம்.பீா்மைதீன் பங்கேற்றுப் பேசினாா்.

கூட்டத்தில், கொலை செய்யப்பட்ட முன்னாள் மஜக மாநில துணைச் செயலா் ஷஹீத் வாசிம் அக்ரம் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 20லட்சம் நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும், 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணைச் செயலா்கள் இணையத்துல்லா, ஆதம்பின் ஹனிபா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலா் சாகுல், மாவட்ட மருத்துவ அணிச் செயலா் மாஷா மஸ்ஜித், மாவட்ட மனித உரிமை செயலா் பீா்மைதீன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT