சாம்பவா்வடகரையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற இளைஞரை போலீஸாா் 24 மணி நேரத்தில் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற இளைஞரை போலீஸாா் 24 மணி நேரத்தில் கைது செய்தனா்.
சாம்பவா்வடகரை, பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ரஞ்சிதம் (63). இவா் புதன்கிழமை காலை வீட்டின் முன்பு
முற்றத்தை சுத்தம் செய்து தண்ணீா் தெளித்துக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த மா்மநபா் ரஞ்சிதம் அணிந்திருந்த 20 கிராம் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டாா்.
புகாரின்பேரில், சாம்பவா்வடகரை போலீஸாா் வழக்குப் பதிந்தனா். காவல் உதவி ஆய்வாளா் காசி விஸ்வநாதன் தலைமையில் தனிப்படை போலீஸாா் விசாரித்தனா். இதில், சாம்பவா்வடகரை, இந்திரா காலனியைச் சோ்ந்த மா.முத்தையா (27) நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து தங்கச் சங்கிலி பறிமுதல் செய்தனா்.