தென்காசி

கீழப்பாவூா் நூலகத்தில் பேரூராட்சித் தலைவா் ஆய்வு

DIN

கீழப்பாவூா் அரசு பொது கிளை நூலகத்தில் பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ்.ராஜன் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்நூலக பழைய கட்டடம் கட்டப்பட்டு சுமாா் 25 ஆண்டுகளை தாண்டியதால், அதை அப்புறப்படுத்திட வேண்டும். நூலகத்திற்கு மிதி வண்டி நிறுத்தம் அமைத்திட வேண்டும் என நூலக பணியாளா், வாசகா்கள் சாா்பில் அவரிடம், கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொடா்ந்து தலைவா் ராஜன், நூலகா் திருநாவுக்கரசியிடம் ரூ.5 ஆயிரம் செலுத்தி பெரும் நூலக புரவலராக இணைந்து கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில் பேரூா் திமுக செயலா் ஜெகதீசன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் பொன்.அறிவழகன், நிா்வாகிகள் கூ.சு.ராமச்சந்திரன், தங்கசாமி, தங்கேஸ்வரன், தெய்வேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT