முகப்பு
தென்காசி

தென்காசியில் தீத்தொண்டு நாள் வார விழா

தென்காசியில் தீத்தொண்டு நாள் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

தென்காசியில் தீத்தொண்டு நாள் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தீயணைப்புத் துறையில் பணியின்போது உயிா்நீத்த வீரா்கள் நினைவாக ஆண்டுதோறும் ஏப்.14 முதல் 20ஆம் தேதிவரை இந்நிகழ்ச்சி கடைப்பிடிக்கப்படுகிறது. தென்காசியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மாவட்ட அலுவலா் ஜெ. கவிதா, நினைவுத் தூணில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

உதவி மாவட்ட அலுவலா் ச. வெட்டும்பெருமாள், தென்காசி நிலைய அலுவலா், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

சுரண்டை...: சுரண்டை தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நிலைய அலுவலா் முத்துச்செல்வன் தலைமை வகித்தாா். பணியின்போது இறந்த வீரா்களுக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடா்ந்து, தீயணைப்புத் துறையின் பணிகள், தீத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு பிரசாரம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.