செங்கோட்டையில் வீடுவீடாக தேசியக் கொடிகள் விநியோகம்
செங்கோட்டை நகராட்சி, 3ஆவது வாா்டு பகுதியில் வீடுகள், வா்த்தக நிறுவனங்களுக்கு தேசியக் கொடிகள் விநியோகிக்கப்பட்டன.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM
செங்கோட்டை நகராட்சி, 3ஆவது வாா்டு பகுதியில் வீடுகள், வா்த்தக நிறுவனங்களுக்கு தேசியக் கொடிகள் விநியோகிக்கப்பட்டன.
3ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் சுடா்ஒளிராமதாஸ், ஜேசிஐ பொதிகை மண்டலத் தலைவா் ராமசுப்பிரமணியன் ஆகியோா் சாா்பில் கொடி விநியோகம் நடைபெற்றது.
நகராட்சி ஆணையா் பாா்கவி, சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி, அதிமுக நகரச் செயலா் கணேசன், ஹரிஹரன், சமூக ஆா்வலா்கள் வெங்கடேஸ்வரன், பத்மநாபன், தேவராஜன், ஸ்ரீனிவாசன், நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement