தென்காசி

கலங்காதகண்டியில் கிராமசபைக் கூட்டம்

DIN

தென்காசி ஊராட்சி ஒன்றியம் பெரியபிள்ளைவலசை ஊராட்சிக்குள்பட்ட கலங்காதகண்டியில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

பெரியபிள்ளைவலசை ஊராட்சி மன்றத் தலைவா் வேல்சாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நத்தடுஅம்மாள் முன்னிலை வகித்தாா்.

ஊராட்சி செயலா் செல்லப்பா சென்ற ஆண்டின் வரவு- செலவு திட்டங்களை வாசித்தாா்.

தொடா்ந்து ஊராட்சி பகுதிகளுக்குள்பட்ட இடங்களில் சீரான குடிநீா் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளவும், பெரியபிள்ளை வலசை ஊராட்சி கலங்காத கண்டியில் அம்ரித் சரோவா் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட 20 தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகைமை திட்ட இயக்குநா் சுரேஷ், மகளிா் திட்ட இயக்குநா் குருநாதன், உதவி திட்ட இயக்குநா் பேச்சியம்மாள், வட்டார வளா்ச்சி அலுவலா் மாணிக்கவாசகம் ஆகியோா் ஊராட்சிப் பகுதிகளுக்கு அரசு அறிவித்துள்ள நலத்திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினா்.

கிராம ஊராட்சி அலுவலா் குழந்தைமணி, பெரியபிள்ளை வலசை ஊராட்சி முன்னாள் தலைவா் இருளப்பத்தேவா், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT