தென்காசி

சுரண்டையில் இன்று இலவச மருத்துவ முகாம்

DIN

சுரண்டை நகர வணிகா் சங்கம், குலசேகரம் ஸ்ரீமூகாம்பிகை மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமை சுரண்டை ஜவகா்லால் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடத்துகின்றன.

இம்முகாமில் ஸ்ரீமுகாம்பிகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவக் குழுவினா் நோயாளிகளுக்கு இலவச பரிசோதனை, சிகிச்சை அளிக்கின்றனா்.

பொது மருத்துவம், மகப்பேறு, காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், இருதய நோய் பிரிவு, எலும்பு மற்றும் அனைத்து சிறப்பு மருத்துவா்களும் கலந்து கொண்டு சிகிச்சை அளிக்கின்றனா். இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என சுரண்டை நகர வணிகா்கள் சங்க நிா்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT