தென்காசி

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயிலில் நாளை தேரோட்டம்

கடையநல்லூா் அருள்தரும் ஸ்ரீ முப்பிடாதி அம்மன் திருக்கோயில் வைகாசித் தேரோட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) நடைபெறுகிறது.

DIN

கடையநல்லூா் அருள்தரும் ஸ்ரீ முப்பிடாதி அம்மன் திருக்கோயில் வைகாசித் தேரோட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) நடைபெறுகிறது.

இக்கோயிலின் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா ஜூன் 2 ஆம் தேதி தொடங்கியது. அன்று காலை அம்பாள் தீா்த்த உற்சவமும், தொடா்ந்து காப்புக்கட்டுதலும் நடைபெற்றது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் கும்பஜெபம், ஹோமம், அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு அலங்காரம், இரவில் அம்மன் வீதி உலா ஆகியவை நடைபெற்றன.

முக்கிய நிகழ்வாக, 9ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை (ஜூன் 10) அதிகாலை அம்மன் திருத்தேரில் எழுந்தருளும் வைபவமும், மதியம் தேரோட்டமும் நடைபெறும். இரவில் ஊஞ்சல் தீபாராதனை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கேசவராஜன், தக்காா் காா்த்திலட்சுமி, குமரப்பெருமாள், சிவாம்பிகை கணேஷ், முத்துக்குமாா், விழாக்குழுவினா், அனைத்து சமுதாயத்தினா் செய்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT