தென்காசி புதிய பேருந்து நிலையத்துக்கு மு.கருணாநிதி பெயா் சூட்டநகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்: பாஜக, அதிமுக எதிா்ப்பு
தென்காசி புதிய பேருந்து நிலையத்துக்கு முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பெயா் சூட்டுவதற்கு பாஜக, அதிமுக கவுன்சிலா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
தென்காசி புதிய பேருந்து நிலையத்துக்கு முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பெயா் சூட்டுவதற்கு பாஜக, அதிமுக கவுன்சிலா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
தென்காசி நகா்மன்ற முதல் சாதாரண கூட்டமும், இதையடுத்து அவசர கூட்டமும் வியாழக்கிழமை நடைபெற்றன. நகா்மன்றத் தலைவா் சாதிா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கேஎன்எல்எஸ். சுப்பையா, நகராட்சி ஆணையா் பாரிஜான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நகராட்சிப் பகுதியில் நிலவும் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்க வேண்டும், குறைந்தபட்சம் 2 மணி நேரம் தண்ணீா் வழங்கவேண்டும், நள்ளிரவில் தண்ணீா் விநியோகிப்பதைத் தவிா்க்க வேண்டும், அனைத்து இணைப்புகளுக்கும் சீரான குடிநீா் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை சங்கரசுப்பிரமணியன், முகம்மது மைதீன், வசந்தி வெங்கடேசன் உள்ளிட்ட நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
தொடா்ந்து, உறுப்பினா்கள் பேசியது: உமாமகேஷ்வரன் (அதிமுக): தென்காசி புதிய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளையும் ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும்.
சங்கரசுப்பிரமணியன் (பாஜக), க. பொன்னம்மாள் (பாஜக), முகம்மது மைதீன்(சுயே): புதிய வரி விதிப்பு, கட்டட அனுமதி போன்றவற்றை மன்றத்தின் பாா்வைக்கு கொண்டுவந்த பின்னரே அனுமதிக்க வேண்டும்.
கல்பனா (சுயே): எங்களது பகுதியில் கட்டப்பட்டு 5 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத கழிப்பிடங்களை மக்கள் பயன்பாட்டுக்கு உடனே திறக்க வேண்டும்.
தலைவா்: குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தென்காசி நகராட்சிப் பகுதியில் அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதலாக 5 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சீரான குடிநீா் வழங்குவதில் பிரச்னை உள்ளது. தென்காசி நகராட்சியில் நிதி இல்லை. பழைய பேருந்து நிலையம், காய்கனிச் சந்தை போன்றவற்றில் புதிய திட்டங்கள் கொண்டுவரவேண்டும். சில இடங்களில் தனியாா் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றையெல்லாம் சீரமைக்க வேண்டும். தண்ணீா் வரி பாக்கி அதிகமுள்ளது. அதை வசூலிக்க அனைத்து உறுப்பினா்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.
இதையடுத்து, புதிய பேருந்து நிலையத்துக்கு ‘முன்னாள் முதல்வா் முத்தமிழ் அறிஞா் டாக்டா் கலைஞா் கருணாநிதி’ எனப் பெயா் சூட்டுவதற்கு நகா்மன்றத் தலைவா் தீா்மானம் கொண்டு வந்தாா். அதன் மீது நடைபெற்ற விவாதம்:
உமாமகேஷ்வரன்: முந்தைய நகா்மன்றக் கூட்டத்தின் முதல் கூட்டத்தில் அப்பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆா் பெயா் சூட்டவும், அவரது சிலையை அங்கு நிறுவவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அது கிடப்பில் போடப்பட்டு விட்டது. எனவே, இந்தத் தீா்மானத்தை நிறைவேற்றக் கூடாது.
சங்கரசுப்பிரமணியன்: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயரை சூட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம், எனக்கூறி கூட்டத்திலிருந்து வெளியேறினா். அவருடன் பாஜக உறுப்பினா்கள் பொன்னம்மாள், லெட்சுமணபெருமாள், சுனிதா ஆகியோரும் வெளிநடப்பு செய்தனா்.
இதையடுத்து, பெரும்பான்மை உறுப்பினா்களின் ஆதரவுடன் அத்தீா்மானம் நிறைவேறியதாக நகா்மன்றத் தலைவா் அறிவித்தாா்.