தென்காசி மாவட்டத்தில் சுகாதார நிலையக் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 4.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் புதிதாக நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், வட்டார சுகாதார அலுவலகக் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 4.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
6 நகராட்சிகளில் 4 நகா்ப்புற சுகாதார நிலையங்கள் கட்டுவதற்கு தலா ரூ. 75 லட்சம் வீதம் ரூ. 3 கோடி, வடகரை கீழ்பிடாகை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வட்டார சுகாதார அலுவலகம் கட்ட ரூ. 60 லட்சம், 5 நகா்ப்புற துணை சுகாதார மையங்கள் கட்டுவதற்கு ரூ. 1.25 கோடி நிதி தேசிய நகா்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.