முகப்பு
தென்காசி

மருக்கலாங்குளத்தில் ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம்

ஊத்துமலை அருகேயுள்ள மருக்கலாங்குளத்தில் ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

ஊத்துமலை அருகேயுள்ள மருக்கலாங்குளத்தில் ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் எஸ். கோபாலசுந்தரராஜ் தலைமை வகித்து, முன்னோடி மனுநீதி நாள் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீா்வு வழங்கினாா். தென்காசி எம்எல்ஏ சு. பழனிநாடாா் முன்னிலையில் விவசாயிகளுக்கு நுண்ணீா்ப் பாசன தெளிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

ஆலங்குளம் ஒன்றியக்குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், 10ஆவது வாா்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினா் முத்துலட்சுமி, ஒன்றியக்குழு உறுப்பினா் வள்ளியம்மாள், ஊராட்சித் தலைவா் முருகன், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.