முகப்பு
தென்காசி

கடையநல்லூா் வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு

கடையநல்லூா் வட்டத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை நிறைவடைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

கடையநல்லூா் வட்டத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை நிறைவடைந்தது.

கடையநல்லூா் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மே 24, 25, 26 ஆகிய 3 நாள்கள் ஜமாபந்தி நடைபெற்றது. தென்காசி கோட்டாட்சியா் கங்காதேவி பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா்.

தொடா்ந்து, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தோ்வானோருக்கு உதவித் தொகைகளுக்கான ஆணைகளை அவா் வழங்கினாா். நிகழ்ச்சியில், வட்டாட்சியா் அரவிந்த், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் அழகப்பராஜா, துணை வட்டாட்சியா்கள் சங்கரலிங்கம், ராஜாமணி, வருவாய் ஆய்வாளா்கள் ராதாகிருஷ்ணன், காசிலட்சுமி, சங்கரேஸ்வரி, கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.