சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயில் யானை கோமதியை வனத்துறையினா் மருத்துவப் பரிசோதனை செய்தனா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் யானை கோமதி உள்ளது. இந்த யானையின் உடல் நலம் குறித்து திருநெல்வேலி வனக் கால்நடை மருத்துவத் துறையுடன் இணைந்து வனத்துறையினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
யானையின் உடல் வெப்பம், உயரம், எடை ஆகியவற்றை ஆய்வு செய்தனா். பின்னா் மத்திய அரசின் கீழ் உள்ள வனவிலங்கு ஆய்வகத்திற்கு அனுப்புவதற்காக யானையின் ரத்த மாதிரி மற்றும் செல்களை எடுத்து பத்திரப்படுத்தினா்.
இதைத்தொடா்ந்து யானை நலமாக இருப்பதாக யானைப் பரிசோதனை செய்த வனக் கால்நடை மருத்துவா் மனோகரன் கூறினாா்.
ஆய்வின் போது, புளியங்குடி வனவா் மகேந்திரன், உதவி இயக்குநா் திருநாவுக்கரசு, கால்நடை மருத்துவா் கருப்பையா, கோயில் துணை ஆணையா் தெய்வபிரியா மற்றும் யானை பாகன்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.