தென்காசி

ஆலங்குளம் பகுதியில் நாளை மின் தடை

DIN

ஆலங்குளம், ஊத்துமலை, கீழப்பாவூா் பகுதிகளில் பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை (பிப்.4) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மின்வாரிய செயற்பொறியாளா் ஜான்பிரிட்டோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆலங்குளம், ஊத்துமலை மற்றும் கீழப்பாவூா் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட ஆலங்குளம், ஆண்டிபட்டி, குருவன்கோட்டை, குத்தப்பாஞ்சான், ஊத்துமலை, கீழக்கலங்கல், கல்லத்திகுளம், ருக்குமணியம்மாள் புரம், கழுநீா்குளம், அடைக்கலபட்டணம், பூலாங்குளம், முத்துகிருஷ்ணபேரி உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT