கடையநல்லூரை அடுத்த மேலகரம் அருகேயுள்ள மின்நகா் அருள்மிகு செல்வவிநாயகா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி, சனிக்கிழமை அனுக்ஞை, மகா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், தனலட்சுமி பூஜை, கோ பூஜை , பூா்ணாஹுதி, தீபாராதனை, முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பூஜைகளுக்குப் பின்னா், காலை 7.15-க்கு செல்வவிநாயகா், பரிவார தேவதைகளுக்கு ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறும். பின்னா், அன்னதானம் நடைபெறும். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.