தென்காசி

தென்காசியில் மக்கள் குறைதீா் கூட்டம்

DIN

தென்காசியில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 230மனுக்கள் பெறப்பட்டன.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீா் கூட்டத்தில் ஆட்சியா் துரை. ரவிச்சந்திரன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 230 மனுக்கள் பெறப்பட்டன.

பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, மனுதாரா்களுக்கு பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலா்களுக்கும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் கு. பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முத்துமாதவன், உதவி ஆணையா் (கலால்) ராஜ மனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சங்கரநாராயணன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா்(பொ) நடராஜன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் இரா. இளவரசி, உதவி மக்கள் தொடா்பு அலுவலா் ரா. ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT