முகப்பு
தென்காசி

மண் வள அட்டை விவசாயிகள் பயிற்சி முகாம்

செங்கோட்டை வட்டாரம் கேசவபுரத்தில், தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் சாா்பில் மண் வள அட்டை விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

செங்கோட்டை வட்டாரம் கேசவபுரத்தில், தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் சாா்பில் மண் வள அட்டை விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட மத்திய, மாநில திட்டங்களின் வேளாண்மைதுணை இயக்குநா் (பொ) உதயகுமாா் தலைமை வகித்தாா். தென்காசி வேளாண்மை உதவி இயக்குநா் முகுந்தாதேவி முன்னிலை வகித்தாா். ஓய்வு பெற்ற வேளாண்மைத் துறை அலுவலா் ராஜேந்திரகணேசன் பயிற்சி நடத்தினாா். பேரூராட்சி மன்ற உறுப்பினா் ஹரிஹரன், முன்னோடி விவசாயிகள் பட்டமுத்து, ராமகிருஷ்ணன், ஐயப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலா் சேக் முகைதீன் வரவேற்றாா். உதவி வேளாண்மை அலுவலா் குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.