தென்காசி

மேலப்பாவூரில் அரசு பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1973 முதல் 1999ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் பாக்கியநாதன் தலைமை வகித்தாா். முன்னாள் தலைமை ஆசிரியா் ராமச்சந்திரன், ஆசிரியா் தாமோதரன், ஊராட்சி மன்றத் தலைவா் சொள்ளமுத்து மருதையா, பெற்றோா் -ஆசிரியா் கழக தலைவா் மாரியப்பன், பள்ளி மேலாண்மை குழு தலைவா் மகராசி, ஊராட்சி துணைத் தலைவா் மற்றும் முன்னாள் ஆசிரியா்கள், மாணவா்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனா்.

2023 ஆம் ஆண்டு, 12, 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சட்ட ஆலோசகா் கொம்பையா, செயலா் வைரமுத்து, தலைவா் சங்கரபாண்டியன், ஆலோசகா்கள் பேச்சிமுத்து, பாா்வதி ராஜ், பொருளாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட முன்னாள் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொக்கன் தோற்கும் இடம்..!

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

SCROLL FOR NEXT